Sunday, April 25, 2010

இன்று கோவிலில்

சித்திரை திருவிழாவிற்க்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை நம் கோவிலில் 50 பங்காளிகள் ஒன்று சேர்ந்து நம் சுவாமிகள் அனைவரையும் திருநீராட்டி, கோவிலையும் சுத்தப்படுத்தினோம். பின் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்து அவர்களின் அருளை பெற்று மகிழ்ந்தோம். சென்ற ஒரு ஆண்டாக சரியாக மழை பெய்யாத எங்கள் விருதுநகரில் இன்று நம் சுவாமிகள் அருளாசியால் நல்ல மழை பெய்தது.

Saturday, April 24, 2010

நம் சுவாமிகளின் பாடல்கள்

பெருமாள் ஸ்லோகம்
ஓம்    நாராயணாய வித் மஹே வாசு தேவாய தீமஹீ
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

சித்திரை திருவிழா

27.4.2010
காலை 9.00 மணிக்கு மேல் அபிஷேகம்
              12.00 மணிக்கு மேல்  அலங்காரம் செய்து உச்சி கால பூஜை
மாலை 5.00 மணிக்கு மேல்  பூர்வீக கோவிலில் இருந்து திரி எடுத்து   அனைவரும்    ஊர்வலமாய் பெரிய கோவிலுக்கு செல்லுதல்
மாலை 7.00 மணிக்கு மேல் சுவாமிகளுக்கு பூஜை

சித்திரை திருவிழா 2010

வணக்கம்,  நம் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 27.4.10 முதல் 29.4.10 வரை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். நம் பங்காளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பெருமாள், மாதா சாமி, கோவிந்த விநாயகர், கருப்ப சாமி, சப்பாணி சாமி அருள் பெற வேண்டுமாய்  கேட்டு கொள்கிறேன். நன்றி